கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊருக்கு போயிருக்கும்போது ஃப்ரெண்டு ஒருத்தன், ஒரு லேகிய வைத்தியரை பார்க்க சேலம் வரை போகணும் உனக்குத்தானே அவரை நல்லா தெரியும் கூட வா அப்படின்னு கூப்பிட்டன். சரி வெட்டியாத்தான இருக்கோம் அப்டின்னு அவன் கூட போனேன். சேலம் பஸ் நிலையத்தில் இருந்து அந்த வைத்தியர் இடம் வரை போகணும்.
ஊர்ல இருக்கும்போது ஏற்கனவே நிறைய தடவை அங்க போயிருக்கேன். அதனால் எனக்கு அந்த இடம் தெரியும். அங்க போற பஸ் ஏறினோம். சரியான கூட்டம். எல்லாம் கிழவனுங்க கூட்டம். அவனுங்களும் அங்கதான் போறானுங்க போலன்னு நெனச்சிகிட்டேன். அப்புறம் ஒரு ஸ்டாப்பில் கூட்டம் குறைந்தது பின் சீட்டில் ஃப்ரெண்டும் அதற்ககு முந்தைய சீட்டில் நானும் உக்கார்ந்தோம்.
ரோட் சைடுல ஏதோ பிட்டுப்பட விளம்பரத்துன "ஷக்கீலா" சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. அவங்களை ரசிச்சிக்கிட்டே (ஜொள்ளு விட்டுகிட்டேன்னு சொல்லு) இறங்குற இடத்தை மறந்துட்டேன் (ஹிஹி). ஃப்ரெண்டு இறங்கும்போது சிப்பு சிப்பு னு கூப்பிட்டிருக்கான்.
ஆனா நான் ஷக்கீலா போட்டோ பாக்குறதுல ரொம்ப பிஸி. அதனால அவன் கூப்பிட்டதை கவனிக்கலை. பஸ்ல உள்ள ரெண்டு பேர் கூட யாருப்பா சிப்பு சிப்புன்னு கேட்டிருக்காங்க. நான் அதை கண்டுக்கவே இல்லை. அதுக்கப்புறம் ஃப்ரெண்டு கீழ இறங்கி போன் பண்ணி சொன்ன பிறகுதான் கவனிச்சேன் (ஹிஹி).
அதுக்கப்புறம் ரன்னிங்ல இறங்க போகும்போது ஒருத்தர் கேட்டார் "நீங்கதான் சிப்பா"? நான் ஆமான்னு சொன்னேன். அதுக்கு அந்த பெரியவர் எனக்கு கொடுத்த பட்டம் "நீ மிகப்பெரிய சிந்தனையாளன்" . இவ்ளோ பேர் கூப்பிட்டும் கவனிக்கலைன்னா ஏதோ ஒரு பெரிய(?) விஷயம் பத்தி சிந்திச்சிருக்க. "கீப் இட் அப் (?)" அப்டின்னு சொன்னார். இப்போ ஜொள்ளுங்க சீ சொல்லுங்க நான் மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? ஷக்கீலாவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் ஷக்கீலா... அண்ட் தேங்க்ஸ் பிட்டுபடம்
ஒரிஜினல் : மிகச் சிறந்த சிந்தனையாளன்