குவார்ட்டரு உள்ள போயிட்டா அப்புறம் மலரும் நினைவுகளே தானே...?
நான் சின்ன வயசா இருக்கும் போது அடிக்கடி கூவத்துல போய் விளையாடுவேம், ஏன்னா அந்த வாசம்தான் எனக்கு ரெம்ப புடிச்சிருந்துச்சு. எல்லா நேரத்துலேயும் நேரத்துல கூவத்துல அதிகமா தண்ணி ஓடாது. அதுனால ஒவ்வொரு வீட்டுக்கும்(இல்லை ரெண்டு மூணு வீட்டுக்கரங்களுக்கு சேர்த்து) சொந்தமா கூவத்துல இருந்து கால்வாய் தோண்டி வச்சிருப்பாங்க. அதுல வேற யாராவது தண்ணி எடுத்திட கூடாதுன்னு பழைய பிஞ்ச செருப்ப அங்க போட்டு வச்சிருப்பாங்க. சில நேரம் தண்ணி கடன் கேட்டும் வருவாங்க. மழை நேரத்தில் மட்டும் கூவம் நிறைய தண்ணி ஓடும். கூவம் கரையில நின்னு தண்ணி எடுத்திட்டு வரணும்.
கால்வாயிலும் தண்ணி இருக்குறது கஷ்டம்தான். அஞ்சு குடம் தண்ணி எடுத்துட்டா அப்புறம் தண்ணி கூவத்துல இருந்து வடிஞ்சி வர்ற வரைக்கும் காத்திருக்கணும். மாசம் ஒரு தடவை அந்த கால்வாய தூர் வாரணும். அப்பத்தான் தண்ணி நல்லா ஊரும். யாராவது இறங்கி உள்ள இருக்குற சாக்கடைய அள்ளி வெளியில் கொட்டுவாங்க. அப்புறம் அந்த தண்ணியை அப்படியே குடிக்க முடியாது. பால்டாயில்னு ஒண்ணு இருக்கும். அதை அடுப்புல போட்டு சுட வச்சு நாம பிடிச்சு வச்சிருக்குற தண்ணில கரைக்கணும். அப்போத்தான் தண்ணி குடிக்கிற நிலைமைக்கு வரும். யாராவது குடிக்க போகும்போது குடத்துக்குள்ள கைய விட்டு கலக்கிடுவோம். கைலதேங்கி இருக்குற அழுக்கெல்லாம் கரைஞ்சு மறுபடியும் தண்ணி பழைய கலராயிடும். இதுக்கே பயங்கர சண்டை நடக்கும்.
எல்லாரும் தண்ணி எடுத்துட்டு போற அழகே அழகுதான். தலையில ஒரு பானை அல்லது குடம் இருக்கும்(பிளாஸ்டிக் குடம் இல்லை. எவர்சில்வர் குடம். வெறும் பானையே கொஞ்சம் வெயிட்டாத்தான் இருக்கும்.. ஏன்னா.. நாங்க திருடிட்டு போய் எடைக்கு போடும்போது தெரிஞ்சிகிட்டோம்! ) இடுப்புல அல்லது கையில் ஒரு குடம். அங்க வச்சிட்டு வந்தாதான் நாங்க தூக்கிட்டு போயிருவோம்னு பயம்தான்!
அப்புறம் கொஞ்ச நாள் ஆனதும் சைக்கிள் வாங்கி கொடுத்தாங்க. பிறகு நான் சைக்கிள்ள அடகு வச்சிட்டு போயி தண்ணி அடிச்சிட்டு வருவேன். பின்னாடி உள்ள கேரியல மட்டும் கலட்டி வித்து ரெண்டு குவாட்டராவது அடிச்சிரு
அப்புறம் கூவம் கரைதான் பொழுதுபோற இடம். அங்க நைட்டாகிட்டா பலான பலான மேட்டருங்க நடக்கும். எல்லாத்தையும் சிகரெட்ட பத்த வெச்சு அந்த வெளிச்சத்துலயே திருட்டுத்தனமா பார்ப்போம். அங்க மீந்து போன சாராயம், கஞ்சா, சுண்டக்கஞ்சின்னு கெடைகும். ஆள் இல்லாத நேரமா பாத்து எடுத்து அடிப்போம். அங்க குட்டைக்கு பக்கத்துல உடைச்சு கிடக்குற பிளேடு வச்சிதான் முடிவெட்டுறது,ஷேவிங் பண்றது எல்லாம் நாங்களே மாத்தி மாத்தி பண்ணிக்குவோம்.
மழை காலத்தில்தான் கூவத்தில் தண்ணி அதிகமாக வரும். குப்பத்தில் உள்ள எல்லோரும் அழுக்கு துணிகளை எடுத்துட்டு(அதோட பிஞ்ச பாய்,கிழிஞ்ச பெட்ஷீட் எல்லாம்) கூவத்துக்கு துவைச்சு குளிக்க கிளம்பிடுவாங்க. நாங்களும் நீச்சல் அடிக்க போறோம்ன்னு சொல்லி அங்க போயி தண்ணில விளையாண்டு அங்க குளிக்கிற பொண்ணுங்கள்ட்ட வம்பு பண்ணி சிலநேரம் செருப்படி வாங்கிருக்கோம்.
என்னா அடி..... போயிட்டாளுங்களா...?
டிஸ்கி - பார்த்தீங்களா மக்களே? நான் ஒன்னும் அந்த டுபாக்கூர் சிரிப்பு போலிஸ் மாதிரி இன்னைக்கு இந்தியாவுல புதன் கிழமை போய் வேலைய பாருங்கன்னு சொல்ல மாட்டேன்! உங்கள் திருப்தியே எனது மாமூல்.. ச்சே.. எனது சேவை!
நன்றி ஒரிஜினல் மலரும் நினைவுகள் கம்மாய்
நன்றி ஒரிஜினல் மலரும் நினைவுகள் கம்மாய்
76 comments:
நான் சின்ன வயசா இருக்கும் போது அடிக்கடி கூவத்துல போய் விளையாடுவேம், ஏன்னா அந்த வாசம்தான் எனக்கு ரெம்ப புடிச்சிருந்துச்சு//
அட.. பன்னிப்பயலே? :-)
எல்லா நேரத்துலேயும் நேரத்துல கூவத்துல அதிகமா தண்ணி ஓடாது. //
ஏன்? எல்லாத்தையும் நீ குடிச்சிருவியா? :-)
அதுல வேற யாராவது தண்ணி எடுத்திட கூடாதுன்னு பழைய பிஞ்ச செருப்ப அங்க போட்டு வச்சிருப்பாங்க//
அந்த செருப்பு எல்லாமே உன்னைய அடிச்சி பிஞ்சதுதானே? :-)
எருமையவும் சேத்துக்குங்க சார், ஏன்னா அதான் எனக்கு புடிக்கும்..
யாராவது இறங்கி உள்ள இருக்குற சாக்கடைய அள்ளி வெளியில் கொட்டுவாங்க. //
அது என்ன யாராவது? நீந்தான்னு சொல்லு :-)
கூட நிக்கிற ரெண்டு எருமையும் சேர்ந்துதான் குடிப்போம்
சேர்த்துக்கலாம்.. இங்க டெரர் பாண்டியன்னு ஒருத்தன் கோச்சுக்குவான் :-)
செருப்புன்னு இருந்தா பிஞ்சு போகத்தான் செய்யும், இப்படியெல்லாம் கேள்வி கேட்கப்படாது, அதுவும் ஒரு உயர் அதிகாரிய பார்த்து!
பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா..
அப்ப கழனி தண்ணியும் குடிப்பேன்னு சொல்லு :-)
பாவம் பாபு .. அவரை மட்டும் விட்டிருங்க..
பட் எறங்கி சாக்கடைய அள்ளுனதுக்கப்புறமா ஒரு பொறி உருண்ட கொடுப்பாங்க பாருங்க, அந்த டீலிங் எனக்கு புடிச்சு இருந்துச்சு!
இல்ல எங்களுக்கு பீடி வெளிச்சமே போதும்
அப்புறம் கூவம் கரைதான் பொழுதுபோற இடம். அங்க நைட்டாகிட்டா பலான பலான மேட்டருங்க நடக்கும். எல்லாத்தையும் சிகரெட்ட பத்த வெச்சு அந்த வெளிச்சத்துலயே திருட்டுத்தனமா பார்ப்போம்.//
விளக்கு பிடிக்கிரத்தை எவ்வளவு நாசூக்கா சொல்றாங்கையா..
ஒலகத்துலேயே நாந்தான் கேவலமானவன்னு நெனச்சேன்.
உயர் அதிகாரின்னா எப்பவுமே பெஞ்சுமேல நிப்பீங்களா சார்ர்ர்ர்? :-)
அந்த பொறி உருண்டையும் அந்த சாக்கடைக்குள்ளதானே கிடந்தது? :-)
கழனி தண்ணி ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் சார், அதுல கொஞ்சம் கடல புண்ணாக்க ஊர வெச்சி அப்படியே குடிச்சு பாருங்க. எருமைக்கும் அது ரெம்ப புடிக்கும், அதுனால அது உங்கள குடிக்கவிடாது, கேர்புல்லா அதுக்கு முன்னாடி வாயவிட்ரனும்
ஏன் உன் வேலைய சொல்றாங்கன்னு உனக்கு கோவம் வருதா? :-)
ங்கொய்யால.. விட்டா இதுல ஆராய்ச்சி கட்டுரை சமைப்ப போல? :-)
// வெறும் பானையே கொஞ்சம் வெயிட்டாத்தான் இருக்கும்.. ஏன்னா.. நாங்க திருடிட்டு போய் எடைக்கு போடும்போது தெரிஞ்சிகிட்டோம்! )//
எவ்ளோ ஓவாய்க்கு விப்பீங்க ?
ஓஒ.. அப்ப எங்க பாபுவ இன்னும் நீ பார்க்கலியா? :-)
நான் பயங்கர கருப்பா இருப்பேன், அவரு?
// பிறகு நான் சைக்கிள்ள அடகு வச்சிட்டு போயி தண்ணி அடிச்சிட்டு வருவேன். பின்னாடி உள்ள கேரியல மட்டும் கலட்டி வித்து ரெண்டு குவாட்டராவது அடிச்சிருவேன். //
உங்க சைக்கிளா இல்ல அடுத்தங்க சைக்கிளா ?
இல்ல சமைக்கவேணாம் ஊர வெச்சாவே போதும்
அதிகாரி..அதிகாரின்னு சொல்றீங்களே? அது நீங்க படிச்சி வாங்குன பட்டமா சார்ர்ர்ர்? :-)
இல்லை... நீ கேவலமா பயங்கரமா இருப்ப... அவரு பயங்கர கேவலமா இருப்பாரு :-)
அப்பப்போ என்னவிட உயர் அதிகாரிக வந்து டேசன்ல இருக்க பெஞ்சு மேல நிக்க சொல்லுவாங்க.
இருந்தாலும் பொறி உருண்டைன்னு கரெக்டா கண்டுபுடிச்சு எடுத்துட்டம்ல?
ஆஹ மொத்தம் எல்லாரும் கேவலமா இருப்பாங்கன்னு சொல்ற?
டாய் இதுக்கெல்லாம் பில்லா கொடுக்க முடியும்? அவன் எவ்வளவு கொடுக்கிறானோ வாங்கிட்டு போகவேண்டியதுதான்
செத்தாண்டா போலீசு இன்னிக்கு............... போய் யாராவது அவனை கையோட கூட்டிட்டு வாங்க...!
பயபுள்ள எப்படி கோர்க்குது பாரு? வெசம் வெசம் வெசம்.... உடம்பெல்லாம் வெசம்
இல்ல அடிவாங்கி வாங்குன பட்டம்
தம்பி சண்ட போடாம வேலைய பாருங்கப்பா.
நீங்க யார சொல்றீங்க? ஒரிஜினலையா? அவர் இன்னிக்கு வரமாட்டாருங்க, தெரிஞ்சிக்கிட்டு தானே இந்த பதிவே போட்டேன்
இருந்தாலும் ஒரு கணக்கு இல்லாமயா கொடுப்பீங்க ?
இல்லை. ஒரு சந்தேகம்தான்.. கேட்டுத் தெரிஞ்சிக்கலாமேன்னு.. இது தப்பா ?
தப்பே இல்ல தம்பி, அடுத்தவனோடத ஆட்டைய போடுறதுதானே நம்ம வேலையே?
சாரி கணக்குல நான் வீக்கு.
என்ன விட கேவலமாவும் ஆளுக இருக்காங்கன்னு இப்பத்தான் கேள்விபடுறேன்.
அதெல்லாம் கரெக்டா தெரிஞ்சு வெச்சிருக்கேய்யா... ஆனா அவரு வராம இங்க பப்பு வேகாதே?
//
டிஸ்கி - பார்த்தீங்களா மக்களே? நான் ஒன்னும் அந்த டுபாக்கூர் சிரிப்பு போலிஸ் மாதிரி இன்னைக்கு இந்தியாவுல புதன் கிழமை போய் வேலைய பாருங்கன்னு சொல்ல மாட்டேன்! உங்கள் திருப்தியே எனது மாமூல்.. ச்சே.. எனது சேவை!//
ஹ..ஹா ...செந்தாண்டா பன்னாடை ...எங்கடா போய் தொலைஞ்சான்
யோவ் போய் கையோட ஆள கூட்டிட்டு வாங்கய்யா.....!
Present
பிரசண்ட்டுத்தானே? நல்லதா வாங்கி கொடுத்துட்டு போங்க சார்.
im very decent
all bad boys. thooooooo
நைஸ்ஸ்ஸ்... கமெண்ட்.
இருந்துட்டு போங்க
ஒரு ஓரமாவா?
:-)
ஏன் நடுவுல இருந்தா ஒத்துக்க மாட்டீங்களா?
கரடி சுட்ட வடைய தேடிப்பாருங்கா ஆபிஸர்
பருத்திக்கொட்ட புண்ணாக்கும் நான் தாரேன் சொன்ன படி கேளுங்க ஆபிஸர்
என்னது ஆபீசரா? அவரு யாரு உங்க ஆபீஸ்ல கூட வேல செய்யறவரா?
ம்ம்ம்... உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு, புண்ணாக்கு டேஸ்ட்டு?
ஆபிஸர் உயர் அதிகாரின்னா நீங்க கரன்ட்டு கம்பத்துல ஏறுவீங்களா......?
பொறி உருண்டைக்கும் வரி கொடுக்கனுமா ஆபிஸர்
305 ஆ 100 பீடியா ...
வேலைய பாக்கணுமா போங்க ஆபீசர் உங்களுக்கு குசும்பு அதிகம் எங்க மேனஜரே பாக்குறதில்ல .......
மப்பு ஏறிடுச்சின்னா எல்லா கம்பத்துலயும் ஏறுவான் இந்த போலீசு.
இருந்தா கொடுத்துட்டு போங்க வேணாம்னு சொல்ல மாட்டேன்
333
ஒரு சொம்பு சுண்டகஞ்சிக்குன்னு பட்டுன்னு சொல்லிட்டு போங்களேன் ஆபீசர்
நான் சொன்ன வேல வேறங்க
வீக்னச வெளிய சொல்லப்படாது. ஓகே?
அந்த சைக்கிள நீங்கதான் கண்டுபுடிச்சீங்கிளா...
அது தாமஸ் ஆல்வா எடிசன் சார்
சொம்புலயா ...
ப்ரீத்தி குக்கர் வாங்குங்க நல்லா வேகும் ...
அவர விடுங்க கவுண்டரே பாவம்....
இல்ல அண்டாவுல
ஆபிசர்க்கு அதுல ஒன்னு ஒரு பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்........
ப்ரீத்தியோட குக்கர நான் வாங்கிட்டா அப்புறம் ப்ரீத்தி என்ன பண்ணுவா?
வாட் ஐ திங்கிங் எனி வேர் யு சிட் நோ ப்ராப்ளம் கீப் யுவர்ஸ் சேப்...
அப்ப ப்ரஷ்டீஜ் குக்கர் வாங்குங்க ஆபிசர்....
Post a Comment