இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Tuesday, February 14, 2012

காதலர் தினமாம்ல.....


வேலண்டைன்ஸ் டே முடியட்டும், அப்புறம் எங்கிட்டத்தான்டி வரனும்..


டாய்.... இங்க என்ன பார்வை.... ரேஸ்கல்ஸ்.....



ஒத்துக்கிருச்சு...ஒத்துக்கிருச்சு... நேத்து ஹோட்டல்ல கொடுத்த காச திருப்பி கொடுக்க ஒத்துக்கிருச்சு........



இப்ப வாங்கடா.. எவண்டா அந்த புள்ளைக்கு மெசேஜ் அனுப்புனவன்....?


அதோ அதுதான் என் ப்ளாக்கு, மறந்துட்டும் போய் படிச்சிடாதே, செத்துருவ....



தம்பி... இந்த லுக்கு போதுமா...



அய்யய்யோ... என் ப்ளாக்கு படிக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன், கேட்டீங்களா?


Wednesday, February 8, 2012

கன்னிமலை க.பி. சைட்குமார் - எனது உலக சைட் அனுபவங்கள்

 

 

உலகத்தில் பிறக்கும் அனைவருமே ஏதாவது ஒரு மருத்துவமனையில்தான் பிறக்கிறார்கள், ஆனால் யாரெல்லாம் சிறந்த பிகர்களை சரியாக அடையாளம் காண்கிறார்களோ அவர்களே வாழ்க்கையில் சிறந்த பிகருகளை  பெறுகிறார்கள்..ஆனால் அதே சமயம் திறமை உள்ள அனைவருக்குமே நல்ல பிகர் கிடைப்பதில்லை.. டாஸ்மாக்கில் உள்ள சரக்குகளை பாரில் உள்ள சரக்குகளாக்க சில கை கொடுக்கும் கைகள் தேவைப்படுகின்றன..


பிகருகளின்  உலகில் அந்த மாதிரி திறமைசாலிகளை ஊக்குவிக்கும் இருவர் என் கண்ணுக்கு தென்பட்டார்கள் ஒருவர் பஸ்ஸ்டாண்ட் கட்டணக்கழிப்பறை வாட்ச்மேன் கள்ளப்பா, இன்னொருவர் எஞ்சினியரிங் காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் அமரர் பூட்டு.

கள்ளப்பா என்னது போட்டோவை கட்டணக்கழிப்பறையின் முகப்பிலேயே போட்டார். உள்ளே மூன்றாவது கக்கூசில் அமர்ந்து எழுதிய பேருந்து நிலைய கட்டண கழிப்பறை, ஒரு பயண அனுபவம் காமெடி கற்பனை கட்டுரை செம ஹிட் ஆகவே அவர் மனம் மகிழ்ந்து பாராட்டியது எனக்கு இன்னும் சைட் அடித்து உதை வாங்க வேண்டும் என்ற  உத்வேகம் தந்தது..

பொதுவா ஒரு நாள்ல சராசரியா 20 பொண்ணுங்க  , சனி ,ஞாயிறுல 50 பொண்ணுங்கள சைட் அடிக்கனும்னு ஒரு கணக்கு வெச்சுக்கிட்டு சைட் அடிக்கிற நான் அன்னைக்கு மட்டும் 100 பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டேன்.. பாராட்டும், அங்கீகாரமும் கொடுக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாது..



தெலுங்கு பிரச்சார  சபாவில்  கன்னட பிரசாத் ச்ச்சே... கன்னட  பிரச்சார பட்டம் பெற சென்னை தி நகர் தெலுங்கு பிரச்சார சபா போக வேண்டி இருந்தது.. (நான் பத்தாப்பு  படிக்கும்போதே (இப்பவும் அதான் படிச்சிருக்கேன்) சைட் பிக்கப், டிராப்  உள்ளிட்ட 8 வகை கலைகளையும் கரைத்து குடித்திருந்தேன்) பூட்டு அவர்களிடம் முன் கூட்டி தகவல் சொல்லி விட்டேன்.

முதல் முறையாக ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்குள் செல்லும் வாய்ப்பு.. எனக்கு பிரமிப்பாக இருந்தது.. அவர்  வந்தார், என்னை அரவணைத்தார்.. பிகருகளின்  காலை மட்டுமே வாரிவிட்டு பழக்கம் உள்ள நான் முதன் முறையாக ஒரு புகழ் பெற்ற லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் காலையும் வாரிவிட கற்றுக்கொண்டேன்.

பூட்டு  அவர்கள் சைட் அடிப்பதில்  ரசனை மிக்கவர்.. அதனால் அவர் எனது சைட் அடித்த அனுபவங்கள்  பற்றி ஞாபகமாக பல விஷயங்கள் நினைவு கூர்ந்தார்..நான் பொண்ணுங்களை பார்த்தவுடன் பார்வையிலேயே  நன்றாக அளவெடுப்பதாக பாராட்டினார்.. பார்வையிலே அளவெடுப்பதில்  உள்ள சில நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தார்.. 

கல்லூரி பயலுகள் பிகருகளை பற்றி செய்யும் விமர்சனம்  முற்றிலும் நடு நிலைமையில் இருக்காது எனவும் கல்லூரி பயலுகளில்  வெகு சில பயலுகள் மட்டுமே தயவு தாட்சண்யம் இல்லாமல் தெளிவாக பிகருகளை விமர்சிப்பார்கள் என்றும் சொன்னார்.. சில கல்லூரி பயலுங்க காய்ந்து போய் கிடப்பதால்  அவர்கள் பிகரிடம்  உள்ள நல்ல அம்சங்கள் மட்டுமே சொல்வார்கள். மைனஸ் பாய்ண்ட்டை லைட்டாகத்தான் சொல்வாங்க. அதில் இருந்து வித்தியாசப்பட்டு நாம சொல்லணும்  என்றார்..

மேலும் பிகரின் அழகை  ரெண்டே லைனில் சொல்லி முடிச்சிடனும்..  அந்த பிகரை  பார்த்தவர்கள் கூட  விமர்சனத்தை ரசிச்சு படிக்கும்படியும், அந்த பிகரை பார்க்காதவர்கள் விமர்சனம் படிச்சா அந்த பிகரை சைட் அடிக்கும்  ஆவலைத்தூண்டும்படியும் இருக்கனும், அதுதான் ஒரு நல்ல சைட் அடிப்பாளனுக்கு அடையாளம் என்றார்..

அவர் சொன்ன தகவல்களை நான் உள்வாங்கிக்கொண்டேன்... அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டேன்..

பப்ளிக்காக சைட் அடிப்பதை குறைத்துக்கொண்டு லேடீஸ் ஹாஸ்டலுக்குள் சைட் அடிப்பதில் ஆர்வம் காட்டினேன்..  ஆர்ட்ஸ் காலேஜ் ஹாஸ்டலில் ஒரே ஒரு மணி நேரம்தான் சைட் அடிக்க அனுமதி..  கிட்டத்தட்ட 8 பில்டிங் .. அந்த ஒரு மணி நேரத்திற்குள் சைட் அடிப்பதை  நச் என்று அடிக்க  வேண்டும் என்பது சவாலாக இருந்தது..


ஒரு பிகரை  பார்க்கும்போது அந்த பிகரின் ப்ளஸ் மைனசை கணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. ஏ செண்ட்டர் ரசிகர்களுடன் அதாவது மாயாஜாலில் சைட் அடிப்பது ஒரு சைட் அடிப்பாளனுக்கு உகந்ததல்ல என்று உணர்ந்தேன்.. ஏன்னா அவங்க அமைதியா சைட் அடிச்சிட்டு சத்தம் இல்லாம போயிடுவாங்க, ஆனா பி சி ரசிகர்கள் தான் தண்ணி அடிச்சு, விசில் அடிச்சு , கை தட்டி ரசனையோட சைட் அடிக்கிறவங்க .

அதனால நான் எப்போ சைட் அடிக்க போனாலும்  டவுன்பஸ்லதான் போவேன். பிகருகளின்  ஃபீடு பேக் உடனுக்குடன் எனக்கு கிடைச்சிடும்.. அது போக ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் 4 பேர் 4 பேராக சேர்ந்து பிகருகளை  பற்றி கமெண்ட் அடிப்பதை நோட் செய்யத்தொடங்கினேன்..


பஸ் ட்ரைவர்கள் சைட்  ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள்.. அவர்களுடன் டாய்லெட்டுக்கு போய்  சும்மா பேச்சு குடுப்பேன்.. அவர் அந்த பிகர் எவனோடு  ஓடும், தேறுமா, தேறாதா என்பதை ஓப்பனாக சொல்லி விடுவார்..

பெட்ரோல் போடும் பையன்கள், பைக் ஸ்டேண்ட்டில் பாஸ் போடும் ஆள் என ஒவ்வொருவரிடமும் இங்கு பிகருகள் வருமா என  கேட்பேன், ஆரம்பத்தில் அப்படி நாமாக வலிய போய்க்கேட்க கொஞ்சம் தயக்கமாக  இருந்தது. நமக்குத்தான் சூடு சுரணையே இல்லையே? அதான்  கொஞ்ச நாள் போனதும் சரி ஆகி விட்டது , அவர்களே நன்றாக பழகி விட்டார்கள்.. பிகர் வந்தால் போன் பண்ணி  சொல்வார்கள்..



ஒரு வருடம் இப்படியே சைட் அடித்து திரிந்தேன். அது என் கிரியேட்டிவிட்டியை குறைக்கும் அபாயம் இருப்பதாகத்தோன்றியது.. பப்ளிக்காக சைட் அடிப்பதை மீண்டும் தீவிரம் ஆக்கலாமா? என யோசித்த போதுதான் சைட் அடிப்போர் சங்கத்தில் இருந்து அழைப்பு வந்தது.. 1998 டாப் டென் சைட் அடிப்போர் ஒரு சந்திப்பு சென்னை கூவம் கரையில். 

நான் துள்ளிக்குதித்தேன்.. ஏன்னா.... டாப் டென்ல ஒருத்தனா வந்ததுக்காக?... இல்லை... மீதி 9 பேரை அவங்க செலவில் சந்திக்கலாமே, அந்த 9 பேரிடம் உள்ள பிகருகளின் லிஸ்டை வாங்கலாமே? சைட் அடிக்க புது இடங்களை தெரிந்து கொள்ளலாமே? அதனால்தான்....
சைட் அடிப்போர்  சங்க மீட்டிங்கில் கூவம் நதி கரையோரம் என்ன நடந்தது?

Monday, February 6, 2012

பொங்கல்: மலரும் நினைவுகள்

இந்த பொங்கலும் கடந்த பொங்கலைப் போலவே பொங்கலாகவே முடிந்தது...! இந்த வருடமாவது பொங்கல் தீபாவளியாக மாறும் என்று எதிர்பார்த்து என் பாஸிடம்  போனஸ்  கேட்டு செருப்படி வாங்கியதுதான் மிச்சம். இருந்தாலும் இந்தப் பொங்கலும் கபாலீஸ்வரர்   கோவிலில் ஓசியிலையே முடிந்தது. பொங்கல்  அன்று காலை கபாலீஸ்வரர்  கோவிலில் சகபிச்சைக்காரர்களுடன் பிச்ச எடுத்துவிட்டு  மதியம் வடபழனியில் பிச்ச எடுக்க சென்றேன். மாலை ஆறு மணிக்கு எக்மோரில் பிச்ச எடுப்பதாக பிளான். சரியாக ஆறு மணிக்கு பவர் ஸ்டார் கெட்டப்பில் துபாய் பிச்சைகாரன் டெரரும், சிங்கப்பூர் பிச்சைகாரன் ஜெயந்தும்  வந்து சேர்ந்தனர்.

முதல் போணி பதிவர்  பன்னிகுட்டி கையால்தான் வாங்க வேண்டும் என்று டெரர் தனிப்பட்ட முறையில் பன்னிகுட்டி காலில் விழுந்து கெஞ்சியிருந்ததால் பன்னிகுட்டி  நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டாக ஆறு மணி மீட்டிங்குக்கு ஐந்து மணிக்கே அங்கு வந்து காத்திருந்தார். முதலில்  ஒரு டாஸ்மாக்கில்  போய் பீர் ஆர்டர் செய்தோம். ஜெயந்த் பீர் வாங்கி வரும் அழகை பார்த்ததும் கன நேரத்தில் எனக்கு ஒரு கவிதை உதித்தது.... அந்த  கவிதையை கேட்டு நீங்கள் அடம் பிடிப்பீர்கள் என்பதற்காக...


ஒரு பீர் பீப்பாயே
பீரை...
சுமந்து வருகிறதே? 
அடடே.... !!!!!!!!!!!!

பிறகு அனைவரும் தாஜ் ஹோட்டல்  போயி அங்கு சாப்பிட்டு காசு கொடுக்க வில்லை என்றால் செருப்பால் அடிப்பார்கள் என்பதால் வழக்கம் போல மாரியம்மன் கோவில் கூளோடு எங்கள்  இரவு உணவை முடித்தோம். 11.30 மணிக்கு கூழ் ஊத்தியவன்  அண்டாவுல தீந்திருச்சுடா அயோக்கிய ராஸ்கல்களா அப்டின்னு திட்டியதும்தான் அந்த கோவிலை விட்டு கிளம்பினோம்.

மறுநாள் நான்,ஜெயந்த்,டெரர்  மூணு பேரும் ஒரு மாறுதலுக்காக MGM வாசலில் பிச்சை எடுக்கலாம்  என்று பிளான் செய்து கிளம்பினோம். அங்கு வந்தால் எங்கள் மூணு பேருக்கும் திரும்பவும் பிச்சை போட வேண்டி வரும் என பயந்து உடம்பு சரியில்லை என்னால் வர முடியாது என எஸ்கேப்பு ஆகிவிட்டார் பதிவர் பன்னிகுட்டி . ஆனால் அதே நேரம் அவர் பத்து ப்ளாக்குகளில் பிளாக்குக்கு பத்து கமெண்ட் வீதம் போட்டு கொண்டிருந்ததாக தகவல் கிடைத்தது. ஒரு வழியாக MGM ல் பிச்சை எடுக்கும் படலம் இனிதே முடிந்தது.

அன்று மாலை MGM-ல் இருந்து மெரீனா பீச்சுக்கு பிச்சை எடுக்க வரும்போது மீன்பாடி வண்டியில் நான் பிடித்திருந்த கம்பி நம்பர் 4B (Middle) . 4A (Window) ல  அனேகமாக எங்கள் எங்கள் சங்கத்தை சேர்ந்த பெண் ஒருத்தி வந்து உக்காந்துச்சு. நல்ல வடபழனி முருகன் கோவிலில் கொடுக்கும் பொங்கல் நிறம்,  கூவம்  நதியின்  மணம்  அவள்  கூந்தலில் இருந்து  மணம் வீசியது, அரப்பாடி வண்டியோடு போட்டிபோடும் சைசில் இருந்தாள், நல்லா நிறைய ஜன்னல் வைத்த சேலை.. கதவே வைத்த ஜாக்கெட்... சரி இந்த பிகருகிட்ட (????)  கடலைய போட்டுக்கிட்டே இரண்டு  மணி நேர பயணத்தை முடிச்சிடலாம்னு என் மனதில் யோசித்துக்கொண்டிருக்கும்போதே இந்த ஜெயந்த் நாதாரியும் அந்த பொண்ண படிக்க வைக்கிறேன்னு மடக்க பார்த்தான்.. நல்ல வேளை... ஜெயந்த் முழுபாடி வண்டி சைசுக்கு இருந்ததால அது அவன கண்டுக்கவே இல்லை.... என்னையே வச்ச கண்ணு  வாங்காமல் பார்த்துகிட்டே இருந்தாள்! 

அதனால நானும் தைரியத்த வர வழைத்து... அந்த பிகருகிட்ட மெதுவா நகர்ந்து போனேன்.... 
"ஹேய்... ஏன் அப்பிடி குறுகுறுன்னு என்னையவே பார்க்கிற? நாலு பேரு பார்த்தா என்னைய என்ன நினைப்பாங்க? எதுவா  இருந்தாலும் அப்பா  அம்மாவ  வீட்ல  வந்து பேச சொல்லு... ஆனா அதுக்கு முன்னாடி என்கிட்டே உன்னைய எது கவர்ந்து  இழுத்துச்சு? அத சொல்லு... என் மங்களகரமான மஞ்சள் படிந்த பற்களா? இல்லை எண்ணுவதற்கு தோதாக நீட்டிக்கொண்டிருக்கும் எலும்புகளா? அல்லது... கழுதைக்கு போட்டியான  என் குரலா? கூவத்துக்கு போட்டியான என் வாசமா? எதுடா செல்லம் உன்னைய  கவர்ந்தது.... சொல்லுடா.... சொல்லு..ம்ம்ம்......

 நான் இவ்ளோ கேட்டும் அந்த பிகர் பார்வையின் கோணத்தை மாற்றாமல்.... வெறித்தபடியே இருந்தாள்... நான் மீண்டும் மீண்டும் கேட்கவும் அந்த கருத்த.. ச்சீ..பெருத்த குயில் வாய் திறந்தது மெதுவாக.... ஆனா ஆனா அது சொன்ன ஒத்த சொல்லு எனக்கு பொங்கலில் கிடக்கும் கல்லை கடித்தது போல ஒரு வலியை ஏற்படுத்தியது. அப்படியே எந்திரிச்சு மீன்பாடி வண்டி டிரைவரிடம்... எஸ்சூஸ் மீ இங்க நான் ரோட்ல உருண்டு அழனும். அதுக்கு வண்டிய நிப்பாட்ட முடியுமான்னு கேட்டேன். அந்த மீன்பாடி வண்டி டிரைவரோ இம்சை அரசன் பாபுவின் போட்டோவை பார்த்தது போல் மூஞ்சியை கோணலாக்கி ஒரு முறை முறைத்தான். நானும் வேறு வழியில்லாமல் அங்கேயே உக்கார்ந்து அழுதேன்.

அந்த பிகர் சொன்ன ஒத்தை வார்த்தை...
அந்த ஒத்த வார்த்தை
.
.
.
.
.
.
.
போங்க அண்ணா.. நான் இவ்ளோ நேரம் உங்களுக்கு பின்னாடி உக்காந்துருந்த டெரர் அத்தான மட்டும்தானே பார்த்துகிட்டு இருந்தேன்!